Home Notes All Exam Notes வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான வினா, விடை, மற்றும் பொருள்கோள் பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பயிற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

வினா, விடை, மற்றும் பொருள்கோள் என்பது சொற்களின் அர்த்தம், விதிவிலக்கு, மற்றும் பொதுவான பொருள் பற்றிய முக்கியமான பகுதியை சேர்க்கின்றன. இந்த வினா-விடைகள் மூலம், நீங்கள் உங்கள் அறிவை அதிகரிக்க முடியும்.

1) வினா வகைகள் __

அ) 3 ஆ) 4 இ) 6 ஈ) 8

விடை: இ) 6

2) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுகற் பொருட்டு வினவுவது __

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) ஐயவினா ஈ) ஏவல் வினா

விடை: ஈ) ஏவல் வினா

3) “ஜெய காந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என்று நூலகரிடம் வினவுதல்

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) ஐய வினா ஈ) கொளல் வினா

விடை: ஈ) கொளல் வினா

4) ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையாற?’ என வினவுவது

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) ஐய வினா ஈ) ஏவல் வினா

விடை: இ) ஐய வினா

5) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) கொளல் வினா ஈ) கொடை வினா

விடை: ஆ) அறியா வினா

6) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) கொளல் வினா ஈ) கொடை வினா

விடை: ஈ) கொடை வினா

7) மாணவரிடம், ‘இந்தக் கவிதைகன் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல

அ) அறிவினா ஆ) அறியா வினா
இ) ஏவல் வினா ஈ) கொடை வினா

விடை: அ) அறிவினா

8) உடன்பட்டுக் கூறும் விடை __

அ) சுட்டு விடை ஆ) மறை விடை
இ) நேர் விடை ஈ) இனமொழி விடை

விடை: இ) நேர் விடை

9) வெளிப்படை விடைகள் அல்லாததைத் தேர்ந்தெடு

அ) சுட்டு விடை ஆ) மறை விடை
இ) நேர் விடை ஈ) ஏவல் விடை

விடை: ஈ) ஏவல் விடை

10) ‘ என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘ வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது

அ) உற்றது உரைத்தல் விடை
ஆ) வினா எதிர் வினாதல் விடை
இ) உறுவது கூறல் விடை
ஈ) மறை விடை

விடை: ஆ) வினா எதிர் வினாதல் விடை

11) ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று கூறுவது

அ) வினா எதிர் வினாதல் விடை
ஆ) உற்றது உரைத்தல் விடை
இ) உறுவது கூறல் விடை
ஈ) ஏவல் விடை

விடை: இ) உறுவது கூறல் விடை

12) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது __

அ) வினா எதிர் வினாதல் விடை ஆ) உறுவது கூறல் விடை இ) ஏவல் விடை ஈ) இனமொழி விடை

விடை: ஈ) இனமொழி விடை

13) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்

அ) சுட்டு விடை ஆ) மறை விடை இ) நேர் விடை ஈ) ஏவல் விடை

விடை: ஆ) மறை விடை

14) விடையின் வகைகள் __

அ) 4 ஆ) 6 இ) 8 ஈ) 10

விடை: இ) 8

15) கீழ்க்கண்ட வகையினை ஆராய்க

1. வினா – 6
2. விடை – 8
3. பொருள்கோள் – 6

அ) 1 மட்டும் தவறு ஆ) 2 மட்டும் தவறு இ) 3 மட்டும் தவறு ஈ) அனைத்தும் தவறு

விடை: இ) 3 மட்டும் தவறு

16) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது __

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்
இ) கொண்டு கூட்டுப் பொருன்கோள்
ஈ) அளைமறிபாப்புப் பொருள்கோள்

விடை: ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்

17) பாடலில் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது __

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்
இ) கொண்டு கூட்டுப் பொருன்கோள்
ஈ) அளைமறிபாப்புப் பொருள்கோள்

விடை: அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

18) “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்” – என்ற குறளில் பயின்று வரும் பொருள்கோள்

அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விடை: இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

19) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல்

அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விடை: இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

20) ‘ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு’ – என்ற பாடலில் பயின்று வரும் பொருள்கோள்

அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்
இ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விடை: ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

21) கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க

1. ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது:’- முறை நிரல் நிறைப் பொருள்கோள்
2. ‘சொல்வரும் சு+ல் பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கரு இருந்து ஈன்று மேலலார்- கொண்டு கூட்டுப் பொருள்கோள்

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடை: அ) 1 மட்டும் சரி

22) “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிபோக்கர் கேட்டது _ வினா. “அதோ அங்கே நிற்கும்” என மற்றொருவர் கூறியது _ வினா

அ) ஐய வினா, வினா எதிர்லவினாதல்
ஆ) அறிவினா, மறைவிடை
இ) அறியா வினா, சுட்டு விடை
ஈ) கொளல் வினா, இனமொழி விடை

விடை: இ) அறியா வினா, சுட்டு விடை

23) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?

அ) கொளல் வினா ஆ) அறியா வினா
இ) ஐய வினா ஈ) ஏவல் வினா

விடை: அ) கொளல் வினா

24) ‘இறை, செப்பு’ என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்கள்

அ) வினா ஆ) மொழி இ) விடை ஈ) இறைவன்

விடை: இ) விடை

25) “பட்டியுளகாளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்”
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு

அ) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
ஆ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்
இ) மொழிமாற்றுப் பொருள்கோள்
ஈ) விற்பூட்டுப் பொருள்கோள்

விடை: விடையை comment செய்யவும்

சமூகம் மற்றும் பயிற்சி

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான வினா, விடை, மற்றும் பொருள்கோள் வினா-விடைகள் உங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். இவற்றை பழகி, உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை சிறப்பாக மேற்கொள்ளுங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 வினா, விடை, பொருள்கோள் முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version