Wednesday, August 6, 2025

CIVIL SERVICE தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்குகிறது

இந்தியாவிலேயே முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் போட்டித்தேர்வுக்கு தொலைக்காட்சி மூலம் பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்திய அளவில் உயரிய பதவிகளுக்கு தேர்வாக வேண்டும் என்று விரும்புகிற மாணவர்களுக்கு, பெருகி வரும் போட்டிகள் இந்நாளில் பெரும் தடையாக உள்ளன. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் சாதிகளை கடந்து, மத பாகுபாடுகளை கடந்து, மத்திய அரசு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், உயரிய சேவை நோக்கோடு பல்வேறு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவசப்பயிற்சி மையம் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. மனிதநேய பயிற்சி மையம் அளிக்கும் தங்குமிட வசதிகளுடன் படிக்கும் மாணவ-மாணவிகளை தவிர, பிறர் மனிதநேய மையத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ள தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக ஆண்டிற்கு ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாவதாக மாணவர்களும், பெற்றோரும் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் முறையிட்டனர். இதற்கு மாற்றாக புதிய வகையில் பயிற்சி முறையை மாற்றியமைக்க எனது மையம் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் மனஉளைச்சலை தராத வகையில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 4 ஆண்டுகளாக மைய இயக்குனர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்களுடன் ஆலோசித்து தமிழகத்தின் அனைத்துதரப்பு மாணவ-மாணவிகளும் பயன்பெறும் விதமாக, இந்திய அளவில் முதல் முறையாக தொலைக்காட்சி மூலமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.




இதன்மூலம் பெற்றோருக்கு ஒரு ரூபாய் செலவும் இல்லாமல், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற விரும்பும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் முன்னிலையில் தொலைக் காட்சி மூலமாகவே முழுமையான அடிப்படை பயிற்சி வகுப்புகளை கவனித்து கற்று தெரிந்து கொள்ளலாம். தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் அந்த வசதி அனைத்துப்பகுதி மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இணையதள வசதியற்ற, இணையதளம் பெற வழியற்ற மாணவர்கள், குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளாக இல்லாமல் அனைவரும் காணக்கூடிய தொலைக்காட்சி மூலமாக தினமும் ஒரு மணி நேரம் மத்திய அரசு பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளோம். இந்த நேரடி வகுப்புகள், பல்வேறு பாடங்களில் சிறந்த புலமை பெற்ற பேராசிரியர்கள், ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் புலமை பெற்றவர்கள் மூலமாக நடத்தப்படும். ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுத விரும்பும் மாணவ-மாணவிகள், பணியில் இருப்போர், பள்ளி மாணவர்கள், சுயதொழில் செய்வோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும், தொடர்களையும் பார்ப்பது போல் தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் வகுப்புகளை ஏதேனும் ஒருநாள் தவறவிடும் மாணவர்கள் அதற்கான தொடர்புக் குறியீட்டின் (லிங்க்) மூலம், தவறவிட்ட வகுப்புகளை பார்த்து பயன்பெறலாம். அதேபோல், தேவைப்படும் நேரத்திலும் திரும்பவும் அதை கேட்க முடியும். பயிற்சி வகுப்புகளில் தினமும் கலந்து கொள்ளும் மாணவர்கள் அடையாளம் காணப்படுவர். தகுதி, திறமை, ஆர்வம் மற்றும் தொடர் வகுப்புகளில் கலந்து கொள்ளும் தன்மை ஆகியவையும் ஓராண்டுக்கு பிறகு சென்னையில் நடத்தப்படும் நேரடி பயிற்சிக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நேர்முகத்தேர்வு மூலம் சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு தேர்வாகும் தகுதியும், திறமையும் உள்ள மாணவ-மாணவியருக்கு இலவச உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளுடன் தேர்வுகளுக்கு உரிய வகையில் திறன் மேம்பாட்டுடன் கூடிய இறுதி பயிற்சியும் அளிக்கப்படும். மத்திய அரசு பணிகளுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வாக விரும்பும் சாமானிய மாணவ-மாணவிகளுக்கு பொருளாதாரம் எந்தவிதத்திலும் ஒரு பெருந்தடையாக இருந்து விடக்கூடாது என்பதே இப்பயிற்சி முறையின் நோக்கமும், எனது நோக்கமும் ஆகும். இது மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏதேனும் தொலைக்காட்சி ஒன்றில் தினமும் ஒளிபரப்பாகும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் விவரங்களுடன் வெளியிடப்படும்.




இப்பயிற்சி பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழுவிவரங்களை எங்களது இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு அதற்கான அடையாள எண்களை பெற வேண்டும். இது அவர்களுக்கான அடுத்தக்கட்ட பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும். முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எளிதில் வெற்றிக்கொள்ளும் வகையில் இப்பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காலநேரத்தை மிச்சப்படுத்தி, படிப்பில் கவனம் செலுத்தலாம். தேவையற்ற வகையில் சென்னையில் வந்து பயில வேண்டும் என்கிற கட்டாயம் இதன்மூலம் தவிர்க்கப்படும். பேரிடர் காலத்திலும் அல்லது வேறுவிதமான இடையூறுகள் காரணமாக, பயிற்சி மற்றும் கல்வியில் தடைகள் ஏற்படாத வண்ணம் இக்காலத்தில் இப்பயிற்சி வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – IT Assistant பணியிடம்! உடனே விண்ணப்பிக்கவும்! 💻📝

வேலூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. IT Assistant பணியிடத்திற்கு ரூ.20,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 14.08.2025.

வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 22 Nurse, Lab Technician & Hospital Worker பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🏥📝

வேலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. 22 Nurse, Lab Technician, Hospital Worker பணியிடங்களுக்கு ரூ.23,800 வரை சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 108 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் இதோ! 🏥💉

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 108 காலியிடங்களுக்கு ரூ.23,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 18.08.2025.

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – 4 Gender Specialist & IT Assistant பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குகிறது 💼🖥️

திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Gender Specialist & IT Assistant பதவிகளுக்கு ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 11.08.2025.

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector பணியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் 🏥🩺

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Nurse, Pharmacist, Health Inspector ஆகிய 45 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை! கடைசி தேதி 11.08.2025.

திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Computer Operator பணிக்கு 12th தகுதியுடன் விண்ணப்பிக்கலாம்! 🖥️

திருச்சிராப்பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Computer Operator பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. 12th தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,240 சம்பளத்தில் வேலை! கடைசி தேதி 21.08.2025.

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

Related Articles

Popular Categories