Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழகத்தில் உள்ள காவல் துரையின்
ஒரு பிரிவான ஆயுதப்படைக்க விண்ணப்பிக்க விரும்பும் போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக காவல்
துறையின் டி.ஜி.பி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
தமிழக
அரசின் காவல் துறையில்
பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இவற்றில் ஒவ்வொன்றிலும் பல்லாயிரக்கணக்கான போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களினை பல்வேறு
காரணங்களுக்காக ஒரு
பிரிவில் இருந்து மற்றொரு
பிரிவிற்கு மாற்றுவது வழக்கம்.
அதே போல் தற்போது
தமிழக போலீஸ் பட்டாலியனில் பணிப்புரிவோர் ஆயுத
படையில் மாற்றப்பட்ட உள்ளனர்.
தற்போது
தமிழக போலீஸ் பயிற்சி
பள்ளிகளில் பயிலும் 5408 பேருக்கு
விரைவில் அதாவது வரும்
ஜனவரி 02 ஆம் தேதியோடு
பயிற்சி முடிவடைய உள்ளது.
அவர்களுக்கான பணி
ஒதுக்கீடும் பட்டாலியன் பிரிவில்
ஏற்படுத்தப்பட உள்ளது.
பயிற்சி
பெறுவோருக்கு பட்டாலியன் பிரிவில் பணி ஒதுக்கீடு
செய்யப்பட இருப்பதால் பட்டாலியன் பிரிவில் பணியாற்றும் போலீசார்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட
உள்ளனர். குறைந்தது 3 ஆண்டுகள்
பட்டாலியன் பிரிவில் பணியாற்றியவர்கள் தங்களின் விருப்ப
மனுக்களை வழங்கலாம் என
தமிழக காவல் துறையின்
டி.ஜி.பி.
அறிவித்து உள்ளார். விண்ணப்பங்களை அவரவர்களின் எஸ்.பி.க்களின்
மூலமாகவே அனுப்பிட வேண்டும்.