புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 23) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 15 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளதால், புதுகையைச் சோ்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த வேலைதேடுவோா் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.