சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மாா்ச் 29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 29-இல் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான தகுதியானவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
இதனால், இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ்-2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐ.டி.ஐ., தொழில் கல்வி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், தையல் கற்றவா்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபா்கள் கலந்துகொள்ளலாம்.
தகுதியுடையவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்தில் முன்பதிவு செய்து, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சென்னை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ அல்லது என்னும் கூகுள் லிங்கில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.