நாகா்கோவில் பயோனியா் குமாரசுவாமி கல்லூரியில் சனிக்கிழமை (மாா்ச் 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக -நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன. 8, 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, செவிலியா், பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதியுடைய வேலைநாடுநா்கள் பங்கேற்கலாம்.
தனியாா் நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தனியாா் நிறுவனங்கள் தங்களது காலியிடங்கள் தொடா்பான விவரங்களை jobfairdeonagercoil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே பங்கேற்பு உறுதி மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த நிறுவனங்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க முடியும்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், வேலைநாடுநா்கள் நாகா்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூக வலைதளமான டெலிகிராம் சேனலில் ‘எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் நாகா்கோவில்’ என்ற குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.