சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மாா்ச் 21 ஆம் தேதி நடைபெறும் முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சாா்ந்த நிறுவனங்கள் தகுதியான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் இணையதளத்தில் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளாா்.