விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இந்த மாதத்தின் 3ம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளிவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்கள் ஜூலை 19ல் சாத்துார் மேட்டமலை அரசு கல்லுாரியில் காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை பங்கேற்கலாம்.இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்று, ஆதார் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம், என்றார்.