விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. எழுத்துத்தோ்வு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் ஆள்கள் தோ்வு செய்யப்படுவா்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட வேலை தேடும் இளைஞா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுகளின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
முகாமில் பங்கேற்க விரும்பும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.