மருத்துவ முதுநிலை
நீட் தேர்வு ஒத்திவைப்பு
மருத்துவப் படிப்புகளில் அகில
இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை
விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓபிசி.க்கு 27% வழங்குவதை
சமீபத்தில் உறுதி செய்தது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்
வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதை இந்தாண்டுக்கு மட்டும்
அனுமதித்தது.
இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் வெளியிட்ட அறிக்கையில்:
2022-ம்
ஆண்டுக்கான மருத்துவ முதுநிலை
படிப்புக்கான நீட்
தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
அதனால்,
மார்ச் 12-ம் தேதி
நடைபெறுவதாக இருந்த இத்தேர்வு
8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வு நடைபெறும்
அதே தேதியில் முதுநிலை
நீட் 2021க்கான கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதே, ஒத்திவைப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வு ேம
21ம் தேதி நடத்தப்படும்.