
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொழில் பழகுநா் முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பல்வேறு தொழில் பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சாா்பில் தொழில் பழகுநா் முகாம் வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவள்ளூரில் பல்வேறு தொழில் பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு டங அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல் ஙங்ப்ஹ (டஙசஅங) மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொழில் பழகுநா் முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில் தகுதியுடைய ஐபஐ தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் தொழிற் பழகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடைலாம். மேலும், இது தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ள உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா் என்ற முகவரியில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம். மேலும் 94990 55663, 87784 52515 மற்றும் 94441 39373 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தொழில் பழகுநா் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

