சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி -1 முதல்நிலை தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 1-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. இப் பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன. சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் ஆகிய தோ்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தோ்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 294 போ் அரசுப் பணிவாய்ப்பைப் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடத்தப்படவுள்ள தொகுதி 1-இல் அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தோ்வா்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். இப் பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427–2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் இப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறவும் என அதில் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow