தமிழகத்தில் ஆக்சிஜன்
தேவைக்கு அவசர எண் – அரசு அறிவிப்பு
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. இதனால்
பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த
24 மணி நேரத்தில் இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.46 லட்சமாக
உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை
அதிகமாகி கொண்டே உள்ள
காரணத்தினால் பல
மாநிலங்களில் உள்ள
மருத்துவமனைகள் நிரம்பி
உள்ளன.
சில
இடங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்
பற்றாக்குறை காரணமாக இறந்துள்ளனர். இந்த நிலை தமிழகத்திற்கு வராமல் இருக்க ஆக்சிஜன்
ஆலைகளை திறக்க அரசு
தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசும் பல
இடங்களில் ஆக்சிஜன் ஆலைகளை
திறந்துள்ளது. பிரதமர்
நரேந்திர மோடி ஆக்சிஜன்
ஆலை நிறுவனர்களுடன் ஆலோசனை
கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைகளை
கண்டறியும் நோக்கில் சில
முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ
ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள், 104 என்ற இலவச
எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த எண் மூலமாக
ஆக்சிஜன் தேவைக்கு 24 மணி
நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறையை அரசு உருவாக்கியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


