Home Notes All Exam Notes ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

0

ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

·       
அறிவில் சிறந்தவர்
ஒளவையார் என்பது அனைவரும்
அறிந்ததே.

· இவர் சிறுவர்களை நல்வழிப்படுத்த பாடும் பாடல்களில் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.

·    ஆத்திச்சூடியை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும்
வகையில் சிறு சொற்றொடர்களைக் கொண்டு (108 பாடல்கள்) அமைத்துள்ளார்.

·       
கொன்றை வேந்தன்
என்ற நூலைப் படிப்படியாக மனவளர்ச்சி பெற்ற மாணவர்கள்
கற்கும் முறையில் (91 பாடல்கள்)
அமைத்துள்ளார்

·   இவரின் பாடல்கள் எளிமையும்,
இனிமையும் கொண்டு விளங்குகின்றன.

·  இவரின் நூல்களில் பல
அரிய கருத்துக்களையும், நீதிகளையும் காணலாம்.

·       
இவரது பாடல்களில் சமயங்கள்
பற்றியும், சில தத்துவங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.

·       
நல்வழி
என்னும் நூலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தும் திருநீறும் சிறப்பிக்கப்படுகிறது.

·       
கம்பர்,
புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய
புலவர்கள் இவர் காலத்தில்
வாழ்ந்ததாக கூறுவர்.

·       
விநாயகர் அகவல்,
ஞானக் குறள், அசதிக்
கோவை ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

·       
#மூதுரை
என்ற நூல், #வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் (30 பாடல்கள்) தொடங்குகின்றது.

·       
மக்கள் தங்களுடைய வாழ்வில்
கடைப்பிடிக்க வேண்டிய
நல்ல வழிகளை நல்வழி
என்ற நூலில் (40 பாடல்கள்)
தெளிவுபடக் கூறியுள்ளார்

சிறப்புத் தொடர்கள் :

·       
அறம் செய்ய விரும்பு.

·       
இளமையில் கல்.

·       
சேரிடம் அறிந்து சேர்.

·       
இல்லறம் அல்லது நல்லறம்
அன்று.

·       
குற்றம் பார்க்கின் சுற்றம்
இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version