அனுப்பர்பாளையத்தில், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது; இளைஞருக்கான, ‘ஏசி’, குளிர்சாதன பெட்டி பழுதுபார்ப்பு மற்றும் சர்வீஸ் பயிற்சி துவங்க உள்ளது.திருப்பூர் மாவட்டத்தின் ஊராட்சிகளை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இலவச பயிற்சியின் போது, காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றதும், தொழில் துவங்குவதற்கான கடன் உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும். அனுப்பர்பாளையம் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 99525 18441, 86105 33436 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர்சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.