TAMIL MIXER EDUCATION.ன் தருமபுரி
செய்திகள்
2022-2023ம்
ஆண்டுக்கான
மானியத்துடன்
கூடிய
காப்பீட்டுத்
திட்டம்
ரூ.35,000
பெற
விண்ணப்பிக்கலாம்
– தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில்
கால்நடை
பராமரிப்புத்துறை
மூலம்
2022-2023ம்
ஆண்டிற்கான
மானியத்துடன்
கூடிய
கால்நடை
காப்பீட்டுத்
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.
அதன்படி
இந்த
மாவட்டத்தில்
கால்நடை
காப்பீடு
செய்ய
குறியீடு
நிர்ணயம்
செய்து
2100 அலகுகள்
ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில்
கால்நடையின்
மதிப்பீட்டில்
அதிக
பட்சமாக
ரூ.35,000
வரை
மானியத்துடன்
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.
ரூ.35,000
மதிப்பீட்டிற்கு
மேல்
உள்ள
கால்நடைகளுக்கு
கூடுதல்
தொகைக்கான
காப்பீடு
கட்டணத்தை
கால்நடை
உரிமையாளரே
செலுத்த
வேண்டும்.
வறுமை கோட்டிற்கு மேல்
உள்ளவர்களுக்கு
50 சதவீத
மானியத்திலும்,
வறுமை
கோட்டிற்கு
கீழ்
உள்ளவர்கள்
தாழ்த்தப்பட்டவர்
மற்றும்
பழங்குடியினருக்கு
70% மானியத்திலும்
காப்பீடு
செய்யப்படும்.
இத்திட்டத்தின்
மூலம்
அதிகபட்சமாக
ஒரு
விவசாயி
5 எண்ணிக்கைக்குள்
பசு
மற்றும்
எருமை
மாடுகளுக்கு
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.
இத்திட்டத்தில்
இரண்டரை
வயது
முதல்
8 வயது
உடைய
கன்று
ஈன்ற
பசு
மாடு
மற்றும்
எருமைகளுக்கும்,
1 முதல்
3 வயது
உடைய
வெள்ளாடு,
செம்மறி
ஆடுகளுக்கும்
காப்பீடு
செய்து
கொள்ளலாம்.
ஓராண்டு
காப்பீடு
கட்டணமாக
அதிகபட்சமாக
கால்நடையின்
மதிப்பில்
1.45 சதவீதமும்,
மூன்றாண்டு
காப்பீடு
கட்டணமாக
அதிகபட்சமாக
கால்நடையின்
மதிப்பில்
3.00 சதவீதமும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு செய்ய விரும்பும்
கால்நடை
வளர்ப்போர்
அருகில்
உள்ள
கால்நடை
மருந்தகத்தை
அணுகி
பயனடையலாம்.
மேலும்
விபரங்களுக்கு
மண்டல
இணை
இயக்குநர்
அலுவலகம்
கால்நடை
பராமரிப்புத்துறை
தருமபுரி
அல்லது
உதவி
இயக்குநர்
அலுவலகங்கள்
தருமபுரி
மற்றும்
அரூர்
ஆகியவற்றை
அணுகி
பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


