தொழிற் பள்ளிகள்
துவங்க விண்ணப்பம் வரவேற்பு
தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர்
மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், 2022-2023ம்
கல்வியாண்டிற்கு வரும்
ஜூலை 1ம் தேதி
முதல் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், புதிய தொழிற்பிரிவுகளில், கூடுதல் அலகுகள்
துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 30ம் தேதி
நள்ளிரவு 11:59 மணி வரை
www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதன்
பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும்,
விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் மூலம் தெரிந்து
கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு
இயக்குனர், வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை, ஆலந்துார்
ரோடு, கிண்டி, சென்னை
32, தொலைபேசி எண் 044 22501006.
மேலும்,
மண்டல பயிற்சி இணை
இயக்குனர், மண்டல பயிற்சி
இணை இயக்குனர் அலுவலகம்,
58/234 பழைய சென்னை சாலை,
காட்பாடி ரயில்வேகேட் அருகில்
விழுப்புரம் 605 602, தொலைபேசி
எண் 04146 290673 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


