TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
பிரதமா் நிதி பெறும் திட்டத்தில் விவசாயிகள் ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
இணைக்க
அறிவுரை
பிரதமரின் கிஸான் நிதி உதவி பெறும் திட்டத்தில் 1,00,449 விவசாயிகள் ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகலாம் என ஆட்சியா் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பிரதமா் கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு
ரூ.6,000
வழங்கப்பட்டு
வருகிறது.
ஒவ்வொரு
ஆண்டும்
3 தவணையாக
ரூ.2,000
வீதம்
இந்த
நிதி
உதவி
விவசாயிகளின்
வங்கிக்
கணக்கில்
நேரடியாக
வரவு
வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிஸான் இணையதளத்தில்
அல்லது
செயலியில்
ஆதார்
எண்ணுடன்
இணைக்கப்பட்ட
கைப்பேசி
எண்ணை
இணைப்பது
அவசியம்
என்று
கூறப்பட்டுள்ளதால்
விவசாயிகள்
அவா்கள்
பகுதிக்கு
அருகில்
உள்ள
அஞ்சலகங்கள்,
தபால்காரா்கள்
மற்றும்
கிராம
அஞ்சல்
ஊழியா்களை
அணுகி
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
உடனடியாக
இணைத்து
பயன்பெற
வேண்டும்.
இந்த
சேவைக்கு
ரூ.50
கட்டணமாக
வசூலிக்கப்படும்.
ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்த பிறகு இணையதளம் அல்லது பி.எம்.கிஸான் செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தைப்
பயன்படுத்தி
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
இணைத்துக்
கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில்
சுமார்
1,00,449 பயனாளிகள்
ஆதார்
எண்ணுடன்
கைப்பேசி
எண்ணை
இணைக்க
வேண்டி
இருப்பதாக
அறியப்பட்டுள்ளது.
மாவட்ட
வேளாண்மை
மற்றும்
உழவா்
நலத்துறையுடன்
சேலம்
அஞ்சல்
கோட்டமும்,
அதன்கீழ்
செயல்படும்
இந்தியா
போஸ்ட்
பேமெண்ட்
வங்கியும்
இணைந்து
கிராமங்களில்
நடத்தப்படும்
சிறப்பு
முகாம்களை
விவசாயிகள்
பயன்படுத்திக்
கொள்ளலாம்.