TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
விருதுநகரில் காவலா்
தேர்வுக்கு இலவச நேரடி
பயிற்சி
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு
சீருடைப்பணியாளா் தேர்வு
வாரியத்தால் இரண்டாம் நிலைக்காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு
சிறப்புக் காவல்படை), இரண்டாம்
நிலை சிறைக்காவலா் மற்றும்
தீயணைப்பாளா் பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான
கல்வித்தகுதி பத்தாம்
வகுப்பு தேர்ச்சி ஆகும்.
வயது உச்சவரம்பு 31 (வயது
தளா்வு உண்டு), August 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வுக்கான இலவசப்
பயிற்சி வகுப்பு விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக
தன்னார்வ பயிலும் வட்டம்
வாயிலாக ஜூலை 20 முதல்
நேரடியாக நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெறவிரும்பும் மனுதாரா்கள், மின்னஞ்சல் மூலமாகவோ
அல்லது நேரிலோ மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தங்கள்
பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here