
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வாயிலாக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், பெரிய மற்றும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர்.பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், பி.எஸ்சி., மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.எனவே, 18 – 35 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.மேலும், விபரங்களுக்கு, 044– 27237124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

