HomeNewslatest newsமத்திய அரசு திட்டத்தில் மாதம் ரூ.5000 வரை உதவித்தொகையுடன் முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சி
- Advertisment -

மத்திய அரசு திட்டத்தில் மாதம் ரூ.5000 வரை உதவித்தொகையுடன் முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சி

மத்திய அரசு திட்டத்தில் மாதம் ரூ.5000 வரை உதவித்தொகையுடன் முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சி
மத்திய அரசு திட்டத்தில் மாதம் ரூ.5000 வரை உதவித்தொகையுடன் முன்னணி நிறுவனங்களில் தொழில் பயிற்சி

தொழில்முறை சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் முன்னதாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.பிரதம மந்திரி தொழிற் பயிற்சி திட்டம் என்பது 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்னணி நிறுவனங்களில் சுமார் 1.25 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தற்போது இறுதி ஆண்டு வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் வழியாக பயன்பெற விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்கி வருகிறது. இந்தத் திட்டம் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையான தகுதிகள் :

பள்ளி படிப்பை முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பாலிடெக்னிக், டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது.
அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
அதே போன்று, IITs, IIMs, தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.
CA/CMA முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

வயது வரம்பு :

  • மாணவர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை :

  • பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 மாதம் வழங்கப்படும்.
  • இதில் ரூ.4,500 அரசு தரப்பில் இருந்தும் ,
  • ரூ.500 நிறுவனம் மூலமாகவும் அளிக்கப்படும்.
  • கூடுதலாக ரூ.6,000 ஒரு முறை மட்டும் அளிக்கப்படும்.
  • பயிற்சி காலம் மற்றும் சான்றிதழ் :
  • தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 12 மாதங்கள் அதாவது 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும்.
  • இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடி பணி அனுபவம் பெறும்படி பயிற்சி அளிக்கப்படும்.
  • இதன்மூலம் மாணவர்கள் தங்களுக்கான பணி திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
  • பயிற்சி காலம் முடிந்த பின்னர் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
  • எப்படி விண்ணப்பிப்பது ?

ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள் https://www.pminternship.mca.gov.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சிக்கு விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -