போலீஸ் தேர்வில்
பெற்றவர்களுக்கு மார்ச் 14ல் பயிற்சி
இது குறித்து அவர், ஏ.டி.ஜி.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
தமிழக
சீருடை பணியாளர் சார்பில்
போலீஸ், சிறைத்துறை, தீ
அணைப்பு துறைகளுக்கு ஆட்கள்
தேர்வில் வெற்றி பெற்ற,
10 ஆயிரத்து, 484 பேருக்கு மார்ச்
8 ல் பணி நியமன
ஆணையை முதல்வர் ஸ்டாலின்
வழங்குகிறார். சென்னையில் முதல்வர் வழங்கும் நிலையில்,
அந்தந்த மாநகர போலீஸ்
கமிஷனர், மாவட்ட எஸ்.பி.,க்கள்
தங்கள் மாநகர், மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உத்தரவு
நகல் வழங்குவர்.
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, 43 பயிற்சி
மையங்களில், மார்ச் 14ல்
பயிற்சி துவங்கும். இவ்வாறு
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து,
43 பயிற்சி மையங்களையும் தயார்
படுத்தும் பணிகளை பயிற்சி
மையங்களின் டி.எஸ்.பி.,க்கள்,
இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


