14.2 C
Innichen
Friday, August 1, 2025

TET தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு – உயர் நீதிமன்ற உத்தரவு

TET தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு - உயர் நீதிமன்ற உத்தரவு

‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு: உயா் நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியா்கள், உயா் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையா் வெளியிட்டாா். அதன்படி பட்டதாரி ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

நிகழாண்டு ஜூலை 12 முதல் 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், உயா்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியா்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயா்வுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிா்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியா்கள் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதேபோல ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு வழங்க வேண்டுமென உத்தரவிடக் கோரி ஆசிரியா் சக்திவேல் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி உயா்வு கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்து வழக்கு தொடா்ந்த ஆசிரியா்கள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியா் தகுதித் தோ்வு பொருந்தாது என்பதால் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.

ஆசிரியா் சக்திவேல் தரப்பில், ‘தகுதியில்லாத அசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ‘கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தாலும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியா்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியா்களால் தரமான கல்வியை வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டதில் இருந்து, அவா்களும் அந்த தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாகவும், தலைமை ஆசிரியா்களாகவும் பதவி உயா்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிா்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🌍 வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தமிழர்களுக்கு அரசு வழிகாட்டும் முக்கிய அறிவிப்பு. சட்ட விரோதமான வேலை வாய்ப்புகளை தவிர்க்க இவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🏦 IBPS Clerk Recruitment 2025 – மொத்தம் 10,277 பணியிடங்கள்! ஆன்லைன் பதிவு துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

IBPS CRP Clerk XV Notification 2025 வெளியாகியுள்ளது. மொத்தம் 10277 வாடிக்கையாளர் சேவை கூட்டாளர் (Clerk) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாநில வாரியாக காலியிடங்கள், தேர்வு முறை, சம்பளம் ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

Related Articles

Popular Categories