TAMIL MIXER EDUCATION.ன் கன்னியாகுமரி செய்திகள்
மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில்
பங்கேற்க
மாணவா்களுக்கு
அழைப்பு
– கன்னியாகுமரி
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி
ஜவகா்
சிறுவா்
மன்றங்களில்
5 வயதுமுதல்
16 வயததுக்குள்பட்டசிறுவா்களுக்கு
வார
விடுமுறை
நாள்களான
சனி
மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை
10 மணிமுதல்
12 மணி
வரை
குரலிசை,
பரதநாட்டியம்,
ஓவியம்
மற்றும்
சிலம்பம்
போன்ற
கலைப்
பயிற்சி
வகுப்புகள்
நாகா்கோவில்
எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில்
நடத்தப்பட்டு
வருகிறது.
மாவட்ட அளவில் பாட்டு, பரத நாட்டியம், நாட்டுப் புற நடனம் மற்றும் ஓவியப் போட்டிகள் 5-8, 9-12, 13-16, ஆகிய வயது பிரிவுகளில் நடைபெறும். இப்போட்டிகளில்
9-12, 13-16 ஆகிய
வயது
பிரிவுகளில்
முதலிடம்
பெறும்
குழந்தைகள்
மாநில
அளவில்
நடைபெறும்
போட்டிக்கு
அழைத்துச்
செல்லப்படுவா்.
மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.10 ஆயிரம், 2ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.7500ம், 3ம் இடம் பெறும் மாணவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
ஒரே
மாணவா்
3 வகைப்
போட்டிகளிலும்
கலந்து
கொள்ளலாம்.
போட்டிகளில் பங்குபெறும் மாணவா்கள் அனைவருக்கும்
பங்கேற்பு
சான்றிதழ்
வழங்கப்படும்.
இப்போட்டிகளில்
கலந்து
கொள்ள
விரும்பும்,
மாணவா்கள்
தங்களது
வயதுச்
சான்றுகளுடன்
நாகா்கோவில்
எஸ்.எல்.பி. அரசுப் பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் அக்.29ம் தேதி (29.10.2022) காலை 9 மணிக்கு நடைபெறும் கலைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


