நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 26-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூலை 26 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. 40-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் ஜியோ நிறுவனத்தில் தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
முகாமில் 5, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கலந்துகொள்ளலாம். எனவே, விருப்பமுள்ளவா்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.