Saturday, August 9, 2025

UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

No chance for those who missed UPSC exam: Supreme Court orders dismissal of case

UPSC
தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி
செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா
அச்சுறுத்தல் காரணமாக
UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை
என்றுகூறி அதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக
பல முறை தள்ளி
வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட
குடிமைப் பணிகளுக்கான UPSC முதல்நிலைத் தேர்வு கடந்த
அக்டோபர் மாதம் நாடு
முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால்,
கரோனா கட்டுப்பாடுகள் மற்றும்
அச்சம் காரணமாக பலரால்
தேர்வில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், வயது வரம்பு முடிந்தவர்கள், தேர்வில் பங்கேற்க இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் வழக்குகள்
தொடரப்பட்டன. இந்த வழக்குகள்
நீதிபதி .எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது
யுபிஎஸ்சி சார்பில் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது
எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த
வழக்கு கடந்த ஜன.29
அன்று விசாரணைக்கு வந்தபோது,
பல்வேறு அசாதாரணமான சூழலில்,
இக்கட்டான தருணங்களில் இதற்கு
முன்பாகத் தேர்வு எழுத
முடியாதவர்களுக்கு மீண்டும்
வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது தற்போது மட்டும்
ஏன் மறுவாய்ப்பு வழங்க
மறுக்கப்படுகிறது? என
நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும்
பிப்.5-ம் தேதி
அன்று இதே அமர்வில்
விசாரணைக்கு வந்தது. அப்போது
இந்த விவகாரத்தில் மத்திய
அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பதாக அரசுத்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும்,
கடந்த அக்டோபர் மாதம்
நடத்தப்பட்ட UPSC
முதல்நிலைத் தேர்வைக் கடைசித்
தேர்வாகக் கொண்டு தேர்வு
எழுத முடியாதவர்களுக்கு, இந்தாண்டு
மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் மறு வாய்ப்பு
அளிக்கப்படும் என
மத்திய அரசு தரப்பில்
பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதற்கு
UPSC நிர்வாகமும் சம்மதம்
தெரிவித்தது.

ஆனால்
வயது வரம்பு அடிப்படையில் கடந்தாண்டு அக்டோபரில் நடைபெற்ற
தேர்வு கடைசித் தேர்வாக
இருந்து, தேர்வு எழுத
முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மறு
வாய்ப்பு அளிக்கப்படும் என
யுபிஎஸ்சி தரப்பில் கடந்த
பிப்ரவரி 9-ம் தேதி
விளக்கமளிக்கப்பட்டது. 2021-22ஆம்
ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு
விரைவில் வெளியாகும் எனத்
தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கைத்
தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று
மீண்டும் விசாரணைக்கு வந்தது.
எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஆண்டு
அக்டோபர் மாதம் நடைபெற்ற
யுபிஎஸ்சி தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை
என்று கூறி, வழக்கைத்
தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories