ஐடிஐ சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
அரசுத்
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவா்கள், தங்களின்
சான்றிதழ்களில் திருத்தம்
செய்ய விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கரூா் ஆட்சியா் த. பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா்
மாவட்டத்திலுள்ள அரசு,
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளா்கள், தங்களின் தேசியத் தொழிற்சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காகஅந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று திருத்தம்
செய்யலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 2-ஆம்
தேதி கடைசி நாளாகும்.
கூடுதல்
விவரங்களுக்கு கரூா்
அரசு தொழிற்பயிற்சி நிலைய
முதல்வரை 04324-222111, 7538877430 ஆகிய
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.