
கலைஞர் மகளிர் உரிமை தொகை 2025 புதிய விண்ணப்பங்கள் ஜூன் 4 முதல்! யாருக்கு தகுதி? முழு விவரம் இங்கே 🔥
🌟 தமிழக அரசின் முக்கியமான நலத்திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை 2025 யில் புதிய விண்ணப்பங்கள் ஜூன் 4 ஆம் தேதி முதல் பெறப்பட உள்ளன என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
✅ விண்ணப்பதாரர்கள் யார் யார் தகுதி இல்லாதவர்கள்?
தகுதி இல்லாதவர்கள்:
- ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் உள்ள குடும்பங்கள்.
- வருமானவரி அல்லது தொழில் வரி செலுத்துவோர்.
- அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.
- நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள்.
- ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள்.
- ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
✅ இந்த விவரங்கள் அரசு இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
👩👧 குடும்பத் தலைவி யார்?
- குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்ற பெண்கள்.
- ஆண் தலைவர் என்றால் அவரின் மனைவி.
- திருமணமாகாத பெண்கள்/கைம்பெண்கள்/திருநங்கைகள்.
❓ வழக்கமான கேள்விகள் மற்றும் பதில்கள்
1️⃣ ஏற்கனவே விண்ணப்பித்தும் பணம் வரவில்லை ஏன்?
👉 உங்கள் மனுவின் நிலை குறித்து குறுஞ்செய்தி அல்லது இணையதளத்தில் ஆதார் எண் மூலம் சரிபார்க்கலாம்.
2️⃣ குறுஞ்செய்தி வந்தும் பணம் வரவில்லை?
👉 வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3️⃣ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்?
👉 நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
4️⃣ அரசிடம் இருந்து குறுஞ்செய்தி வரவில்லை என்றால்?
👉 விண்ணப்ப நிலை இணையதளத்தில் ஆதார் எண் மூலம் சரிபார்க்கலாம்.
📝 புதிய விண்ணப்பித்தல் எப்படி?
- தேதி: ஜூன் 4 முதல்
- இடங்கள்: தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்கள்
- யார் விண்ணப்பிக்கலாம்:
- புதிய விண்ணப்பதாரர்கள்
- நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
✅ விண்ணப்பிக்க: முதல்வர் திட்ட முகாமுகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
📢 Related Links
🧾 அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
📚 இலவச TNPSC பயிற்சி அறிவிப்புகள்
🔗 Social Media Links
📱 WhatsApp குழு – உடனே சேரவும்
📢 Telegram – நம்ம செனல்
📸 Instagram – Follow பண்ணுங்க
📝 குறிப்பு: தகுதியுள்ள பெண்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்கள் குடும்ப நலனுக்காக இந்த திட்டம் ஒரு பெரிய உதவியாக இருக்கும்! 💪✨