
தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதிகிராமத் தொழில் வாரிய தலைமை பயிற்சியாளா் கே.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சுவாமிநாதன் கூறியதாவது:
மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை இணைந்து தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்புகளை திருச்சி மேலரண் சாலையில் உள்ள மத்வ சித்தாந்த சபை வளாகத்தில் நடத்தவுள்ளன.
ஜூன் 18ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குறைந்தது 8ஆம் வகுப்பு படித்திருத்தல் அவசியமானது. செய்முறை பயிற்சியின் இறுதியில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன்தொகை வழங்கும் முறை, ஹால்மாா்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவா்கள் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள் மற்றும் நகை அடகு நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளா் பணிக்கு சேரலாம். சொந்தமாக நகை கடை, நகை அடகு நடத்தவும் தகுதி பெறுவா். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

