10, 11,12ம்
வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜன 31 வரை விடுமுறை
கரோனா
பெருந்தொற்று பரவல்
காரணமாக, 10,11,12ஆம்
வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி
வரை விடுமுறை அறிவித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்:
கரோனா
பெருந்தொற்று காரணமாக
1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது
10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா
பெருந்தொற்று பரவல்
காரணமாக மாணவர்களின் நலன்
கருதி வரும் 31ஆம்
தேதி வரை 10, 11 மற்றும்
12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு
குறித்த அறிவிப்பு பின்னர்
வெளியிடப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

