TAMIL MIXER
EDUCATION.ன்
சிவகங்கை செய்திகள்
MSME நிறுவனம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கையில்
மத்திய
அரசின்
குறு,
சிறு,
நடுத்தர
தொழில்
வளர்ச்சி
(எம்.எஸ்.எம்.இ.,) நிறுவனம் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்,
என
உதவி
இயக்குனர்
உமா
சந்திரிகா
தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின் அங்கமான குறு,சிறு,நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்
கீழ்
மதுரையில்
உதவி
இயக்குனர்
அலுவலகம்
செயல்படுகிறது.
அந்த
அலுவலகத்தின்
கீழ்
சிவகங்கை
மாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு
இலவச
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
வழங்கப்படும்.
நவ.,
21 முதல்
டிச.,30ம் தேதி வரை நடத்தப்படும்.
இதில் வாழை நார், வெட்டிவேர், சணல், பனை, தேங்காய் ஓடு மற்றும் தேங்காய் நார் ஆகிய மூலப்பொருட்களை
கொண்டு
மதிப்பு
கூட்டப்பட்ட
பொருட்கள்,மூலிகையிலான கொசுவிரட்டி, பூஜை பொருள், தோட்டக்கலை பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள்உற்பத்தி
செய்து
சந்தைப்படுத்துவதற்கான
பயிற்சி
அளிக்கப்படும்.
பயிற்சியை முடித்தவர்களுக்கு
வங்கி
மூலம்
தொழிற்கடன்
பெற்றுத்தர
வழிவகை
செய்யப்படும்.
இப்பயிற்சியில்
எட்டாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
வயது
18 முதல்
45 க்குள்
உள்ள
பட்டியலினத்தை
சேர்ந்தோர்,
பழங்குடியினர்
மற்றும்
பெண்கள்
பங்கேற்கலாம்.
முதலில்
பதிவு
செய்யும்
25 பேருக்கு
மட்டுமே
அனுமதி
வழங்கப்படும்.
முன்பதிவுக்கு
அலைபேசி
எண்
98420 35441ல் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


