
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்காக, சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம், ஆசிரியா் தோ்வு வாரியம் போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னாா்வ பயிலும் வட்ட நூலகத்தில், இந்தத் தோ்வுக்கான புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வு குரூப் 2, குரூப் 2 ஏ தோ்வுகள் மூலம் துணை வணிகவரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா் நிலை-2 உள்ளிட்ட 2,327 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 14.9.2024 -இல் நடைபெற்றது.
இதையடுத்து, நடைபெறவுள்ள முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் அதிகளவிலான பயிற்சித் தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் பதிவு செய்து அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

