திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் குரூப் 4 கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வுக்கான அறிவிப்பு 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421–2999152, 94990–55944 என்ற எண்களையோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.