ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – TNPSC
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை
நிரந்தரப்பதிவு கணக்குடன்
(OTR) ஆதாரை இணைப்பதற்கு வரும்
ஏப்ரல் 30ம் தேதி
வரை கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. TNPSC போட்டித் தேர்வு
எழுதும் தேர்வர்கள் தங்கள்
TNPSC நிரந்தர பதிவு
எண்ணுடன் ஆதார் எண்ணை
ஜனவரி 28ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும்
என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.
குரூப்
2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்
வரும் மார்ச் 23ம்
தேதியுடன் முடிவடைவதால், அந்த
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23ம்
தேதிக்குள் ஆதாரை இணைக்க
வேண்டும். ஏற்கனவே OTR கணக்குடன்
ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடதக்கது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

