TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில், கணினி கணக்கியல் இலவச பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், கணினி கணக்கியல் பயிற்சி இலவசமாக 30 நாள்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியின்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
இப் பயிற்சியில் பங்கேற்க 19 முதல் 45 வயதுக்குள்பட்டஎழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்னப்பிக்கவும். உரிய சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் இணைத்து செப். 6 ஆம் தேதி தொடங்கும் பயிற்சிக்கு முன், சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற பிறகு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீஃப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் – 621212 என்னும் முகவரியில் அல்லது 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.