சபரிமலையில் பங்குனி
உத்திரத் திருவிழா தொடக்கம்
– கரோனா சான்றிதழ் அவசியம்
சபரிமலை
ஐயப்பன் கோயிலில் பங்குனி
உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
பிரசித்தி
பெற்ற சபரிமலை ஐயப்பன்
கோயிலில் பங்குனி உத்திரத்
திருவிழா 10 நாள்கள் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில், இந்தாண்டுக்கான உத்திரத்
திருவிழா இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து மார்ச் 28-ஆம்
தேதி வரை கோயில்
நடை திறந்திருக்கும்.
சபரிமலை
கோயிலுக்குச் செல்ல
விரும்பும் பக்தர்கள் கரோனா
இல்லை என்ற சான்றிதழ்
கட்டாயம் வைத்திருப்பது அவசியமாகும்.
மேலும்,
மாத பூஜையின் தொடர்ச்சியாக இன்று(19.03.2021) காலை
7.15 மணிக்கு கோயில் நடை
மீண்டும் திறக்கப்பட்டு தந்திரி
கண்டரு ராஜீவரு விழாவைக்
கொடியேற்றித் தொடங்கி
வைத்தார்.