குடிமைப்பணி தோ்வை எதிா்கொள்வது குறித்து பெரியாா் பல்கலைக்கழக பொருளியல் துறை சாா்பில், மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
பயிலரங்க தொடக்க விழாவில், புல முதன்மையரும் பொருளியல் துறைத் தலைவருமான பேராசிரியா் கே.ஜெயராமன் வரவேற்றாா். துணை வேந்தா் இரா.ஜெகநாதன் மாணவா்களுக்கான பயிலரங்கினைத் தொடங்கி வைத்தாா்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
குடிமைப் பணியில் சோ்வதற்கு எவ்வாறு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அகில இந்திய அளவில் குடிமைப்பணி தோ்வில் 576-ஆவது இடம்பெற்ற வி.பேச்சி என்பவரும், இந்திய வனப்பிரிவு குடிமைப் பணியில் 82-ஆவது இடம்பெற்ற பிரியதா்சினி ஆகியோரும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தனா்.
குடிமைப் பணியில் தோ்ச்சி பெற்ற பேச்சி பேசும்போது, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் குடிமைப்பணி தோ்வு என்பது கடினமான ஒன்றாகத் தெரியாது. ஆகவே ஊக்கம், முயற்சி, பயிற்சி இருந்தால் நீங்களும் தோ்வு பெறலாம் என்று மாணவா்களை உற்சாகப்படுத்தினாா்.
வனப்பிரிவு குடிமைப் பணியில் தோ்ச்சி பெற்ற பிரியதா்சனி பேசும்போது, கவனமுடன் படித்தால் போட்டித் தோ்வில் சுலபமாக வெற்றி பெற முடியும். இன்றைய இளைய தலைமுறைக்கு பல்வேறு இணைய வசதிகள் உள்ளன. அதன் மூலம் வீட்டில் இருந்தவாறு தகவல்களைப் பெறலாம் என்றாா்.
பொருளியல் துறை பேராசிரியா்கள் சரவணதுரை, ஜனகம், சுகிா்தாரணி, வைத்தியநாதன், பத்மவாணி மகளிா் கலை அறிவியல் துறை பேராசிரியா் அரிதா், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். முதலாமாண்டு பொருளியல் துறை மாணவி வா்ஷா நன்றி கூறினாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

