வேலைவாய்ப்பு பதிவு
புதுப்பிக்க முன்னாள் படைவீரருக்கு அழைப்பு
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தில், 2014, 2015, 2016,
2017, 2019ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள், 2022 மார்ச் 31 வரை
புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட
முன்னாள் படைவீரர் நல
அலுவலகத்தில், வேலை
வாய்ப்புக்கு பதிவு
செய்த முன்னாள் படைவீரர்களில், 2014, 2015, 2016, 2017, 2018, 2019ம்
ஆண்டுகளில், புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுடன், சிறப்பு
முகாம் நடக்கிறது.
விடுபட்டவர்கள், அறிவிப்பு வெளியான, டிச.,
2ம் தேதியில் இருந்து,
மூன்று மாதங்களுக்குள், முன்னாள்
படைவீரர் நல அலுவலகத்தில் புதுப்பிக்கலாம்.
அசல்
படைவிலகல் சான்று, அடையாள
அட்டை, வேலை வாய்ப்பு
புதுப்பித்தல் அட்டை
ஆகியவற்றுடன், மாவட்ட
முன்னாள் படைவீரர் நல
அலுவலகத்தில், பதிவுகளை
புதுப்பித்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

