சைவ வேத
ஆகம பாடசாலையில் பயிற்சி
பெற விண்ணப்பம் வரவேற்பு
சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது சாதி
வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் வகையில் இந்து
சமய அறநிலையத் துறையின்
6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்
ரூ.1.50 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சைவ வேத
ஆகம பகுதிநேர பாடசாலை
பள்ளியில் 3 ஆண்டு சான்றிதழ்
பயிற்சி வகுப்பு நடந்து
வருகிறது.
விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க
வேண்டும். குறைந்தபட்சம் 5-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவராக,
13 வயது நிரம்பியவராக, அதிகபட்சம் 20 வயதுக்கு மேற்படாமல் இருக்க
வேண்டும். பயிற்சிக் காலம்
3 ஆண்டுகள்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதில்
சேர விரும்பும் மாணவர்கள்
சேர்க்கை படிவங்களை கோயில்
அலுவலகத்தில் நேரிலோ,
www.hrce.tn.gov.in என்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்தலாம். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை இணை
ஆணையர் மற்றும் செயல்
அலுவலர், கபாலீஸ்வரர் கோயில்,
மயிலாப்பூர், சென்னை –
600 004 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும். விண்ணப்பங்கள் வரும்
ஜன 15ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

