
மார்ச் 12 நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
இந்திய அரசு மத்திய பனைப்பொருட்கள் நிறுவனம் சார்பில் சேலம், 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும், 12 முதல், 22 வரை, பயிற்சி நடக்க உள்ளது. இதில் தங்கம் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ‘ஹால்மார்க்’ தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில், 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை.
ஆனால், 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பயிற்சி முடிவில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை, அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், 3 புகைப்படம், முகவரி, கல்வி சான்றிதழ்களுடன், 5,300 பயிற்சி கட்டணத்தை, ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

