கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், டி.என். பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படு கிறது.தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பு கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் நடத்தப்படுகிறது.
அங்குள்ள போட்டி தேர்வு மையத்தில் காலை 10:00 மணி முதல், மாலை 5:00 வரை நடக்கிறது.
தொடர்ந்து, அனைத்து சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என, மாவட்ட நுாலகர் கேட்டுக்கொண்டுள்ளர்.