TAMIL MIXER
EDUCATION.ன்
TRB
செய்திகள்
33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
– TRB
இன்று ஜூன் 6ம் தேதி முதல் தமிழகத்தில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
என்று
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்,
தமிழகம்
முழுவதும்
உள்ள
அரசுக்
கல்லூரிகள்
மற்றும்
பள்ளிகளுக்கான
ஆசிரியர்
பணிக்கு,
போட்டித்
தேர்வுகள்
மூலம்
ஆட்கள்
தேர்வு
செய்யப்பட்டு
வருகின்றனர்.
இந்தத்
தேர்வுகளை
டிஆர்பி
எனப்படும்
ஆசிரியர்
தேர்வு
வாரியம்
நடத்துகிறது.
முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும்,
அரசு
கல்வியியல்
கல்லூரிகளுக்கும்
4000 உதவிப்
பேராசிரியர்களை
தேர்ந்தெடுப்பதற்கான
அறிக்கை
ஜனவரி
மாதம்
வெளியிடப்படும்.அதே நேரத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் 33 பேரை தேர்ந்தெடுப்பதற்கான
அறிக்கையும்
வெளியிடப்படும்
என
அறிவிக்கப்பட்டிருந்தது.
6,553
இடைநிலை
ஆசிரியர்களை
தேர்ந்தெடுக்கும்
அறிக்கை
மார்ச்
மாதமும்,
பட்டதாரி
ஆசிரியர்கள்
3,587 பேரை
தேர்ந்தெடுப்பதற்கான
அறிக்கை
ஏப்ரல்
மாதமும்,
பாலிடெக்னிக்
கல்லூரிகளில்
493 விரிவுரையாளர்களை
தேர்ந்தெடுப்பதற்கான
அறிக்கை
மே
மாதமும்
வெளியிடப்படும்
என
ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதால்
பல்வேறு
தரப்புக்களிலிருந்தும்
மிகக்
கடும்
விமர்சனங்கள்
எழுந்தன.
தலைவர்
பதவிக்கு
யாரும்
நிரப்படாததும்
இதற்கு
குறிப்பிட்ட
காரணம்
எதிர்க்கட்சிகள்
கண்டனம்
தெரிவித்தன.இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
.
விண்ணப்பிக்க
தகுதியும்,
விருப்பமும்
உடையவர்கள்
https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
இதில்
வட்டார
கல்வி
அலுவலர்
பணிக்கான
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்.
நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.