HomeBlog50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
மானிய செய்திகள்

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி
பண்ணை
அமைக்க
விண்ணப்பிக்கலாம்

சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்
பண்ணைகள்
அமைக்க
50
சதவீத
மானியம்
அளிக்கும்
திட்டத்தில்
பயன்பெற
வரும்
15
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாட்டுக்கோழிகள்
வளா்ப்பதில்
திறன்
கொண்ட
கிராமப்புற
பயனாளிகளுக்கு
சிறிய
அளவிலான
(250
கோழிகள்ஒரு அலகு) நாட்டுக்கோழிப்
பண்ணைகள்
அமைக்க
50
சதவீத
மானியம்
அளிக்கும்
திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்
ஈரோடு
மாவட்டத்தில்
3
பயனாளிகள்
தேர்வு
செய்யப்படவுள்ளனா்.
தேர்வு
செய்யப்படும்
பயனாளிகளுக்கு
நாட்டுக்கோழி
வளா்ப்புப்
பண்ணைகளை
நிறுவுவதற்கான
கோழிக்
கொட்டகை,
கட்டுமானச்
செலவு,
உபகரணங்கள்
வாங்கும்
செலவு
(
தீவனத்
தட்டு
மற்றும்
தண்ணீா்
தட்டு)
மற்றும்
4
மாதங்களுக்கு
தேவையான
தீவனச்
செலவு
(
கோழி
வளரும்
வரை)
ஆகியவற்றுக்கான
மொத்த
செலவில்
50
சதவீத
மானியம்
(
ரூ.1,50,625)
மாநில
அரசால்
வழங்கப்படும்.




திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

பயனாளிகளிடம்
கோழி
கொட்டகை
கட்ட
குறைந்தபட்சம்
625
சதுர
அடி
நிலம்
இருக்க
வேண்டும்.
இந்தப்
பகுதி
மனித
குடியிருப்புகளிலிருந்து
விலகி
இருக்க
வேண்டும்.
கட்டுமானப்
பணிகள்,
தீவனம்
மற்றும்
உபகரணங்கள்
வாங்குதல்
போன்ற
அனைத்து
செயல்முறைகளும்
பயனாளியால்
செய்யப்பட
வேண்டும்.

ஒவ்வொரு பயனாளிகளுக்கும்
250
எண்ணிக்கையிலான
4
வார
வயதுடைய
நாட்டுக்கோழி
குஞ்சுகள்
ஓசூா்
மாவட்ட
கால்நடை
பண்ணையிலிருந்து
இலவசமாக
வழங்கப்படும்.




பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள்
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும்
பயனாளிகளில்
30
சதவீதம்
பட்டியல்
வகுப்பு,
பழங்குடியினராக
இருக்க
வேண்டும்.

2022-2023ம் ஆண்டுக்கான நாட்டுக்கோழி
வளா்ப்புத்
திட்டத்தின்கீழ்
பயனாளிகள்
பயனடைந்திருக்கக்
கூடாது.
இத்திட்டத்தில்
பயனடைய
விருப்பமும்
தகுதியும்
உள்ளோர்
ஆதார்
அட்டை
நகல்,
பண்ணை
அமையவிருக்கும்
இடத்துக்கான
சிட்டா,
அடங்கல்
நகல்,
50
சதவீத
தொகை
அளிப்பதற்கான
ஆதார
ஆவணங்கள்,
3
ஆண்டுகளுக்கு
பண்ணையைப்
பராமரிப்பதற்கான
உறுதிமொழியுடன்
அருகிலுள்ள
கால்நடை
மருந்தகத்தை
அணுகி
வரும்
15
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்.




மேலும் விவரங்களுக்கு
9445032557,
9445032559
ஆகிய
கைப்பேசி
எண்களில்
தொடா்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -