HomeBlogவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா – புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

 

Voter Not Payable - Report Numbers Report

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாபுகாரளிக்க எண்கள் அறிவிப்பு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகாரளிக்க எண்களை
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக
சட்டமன்றத்திற்கு வரும்
ஏப்ரல் 6-ஆம் தேதி
ஒரே கட்டமாக தேர்தல்
நடைபெறும் என்று தேர்தல்
ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பல்வேறு வகைகளில் பணம்
மற்றும் பரிசுப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாக திமுக உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டின.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து
புகாரளிக்க எண்களை தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்:

 வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து
தகவல் தெரிவிக்க விரும்பினால் itcontrol.chn@gov.in
என்ற மின்னஞ்சலிலும், 9445394453 என்ற
Whatsapp எண்ணிலும் தொடர்பு
கொள்ளலாம்.

தேர்தலில்
பண விநியோகத்தினை கண்காணித்து தடுக்கும் பொருட்டு வருமான
வரித்துறையின் உதவியையும் தேர்தல் ஆணையம் நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!