HomeBlog9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள்

9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள்

 

9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள்

கடந்த
ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான
அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த ஆண்டு
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கத்தின் போது பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது நலன் கருதி
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.
பின்பு நாளடைவில் கொரோனா
நோய்த்தொற்று குறைந்து
வந்ததால் உயர்கல்வி வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.

தற்போது
மீண்டும் நாடு முழுவதும்
கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில்
கொரோனாவின் இரண்டாவது அலை
மிக தீவிரமாக இருந்து
வருகிறது. இந்நிலையில் தற்போது
ஒடிஷா மாநிலத்தில் 1 முதல்
8
ம் வகுப்பு வரை
படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி
பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதே
நேரத்தில் 10 மற்றும் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி
நேரடி வகுப்புகள் நடைபெறும்
என்று அறிவித்துள்ளனர். அதேபோல்
9
மற்றும் 11ம் வகுப்பு
மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகளை தற்போது அந்த
மாநில அரசு தடை
செய்துள்ளது. மேலும் அந்த
வகுப்பு மாணவர்களுக்கு தற்போது
ஆன்லைன் மூலம் பாடங்கள்
நடத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular