APRIL 30 வரை
அதிரடி சலுகை – BSNL
நிறுவனம் அறிவிப்பு
BSNL
நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகள், டிஎஸ்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்ற பல
சேவைகளை வழங்குகிறது. இந்த
சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவு
கட்டணத்தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து பிஎஸ்என்எல் நிறுவனம்
பெற்று வருகிறது. தற்போது
பிஎஸ்என்எல் புதிய சேவைகளுக்கான கட்டணம் ஏப்ரல் மாதம்
30 ஆம் தேதி வரை
செலுத்த தேவையில்லை என
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த
சலுகை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் இணைப்புகள், டிஎஸ்எல் பிராட்பேண்ட் இணைப்புகள் மற்றும் லேண்ட்லைன் சேவை போன்ற புதிய
சேவைகளை இணைக்க விரும்புபவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த
தேவையில்லை. இந்த சலுகை
மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட அளவு
தொகையை மிச்சப்படுத்த முடியும்.
BSNL
நிறுவனத்தின் பிராட்பேண்ட் இணைப்புக்கு நிறுவல் கட்டணமாக
250 ரூபாயும், ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு நிறுவல்
கட்டணமாக 500 ரூபாயும் பெறப்பட்டு வந்தது. அதன்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நீண்ட
காலத்திற்கு பிராட்பேண்ட் இணைப்பை
செயல்படுத்திக் கொள்ள
விரும்பினால் அதன்
நிறுவல் கட்டணத்தில் இருந்து
பூரணவிலக்கு அறிவிக்கப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


