TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
நாடு முழுவதும்
விவசாயிகளுக்கு மாதம்
ரூ.3,000 ஓய்வூதியம்
நாட்டில்
விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்றுவதற்கும் மத்திய
அரசு பல திட்டங்கள் மற்றும் சலுகைகளையும் வழங்கி
வருகிறது. 2018ம் ஆண்டு
பிரதான் மந்திரி கிசான்
சம்மான் நிதி திட்டம்
விவசாயிகளுக்கு நிதி
உதவி வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. சுமார் 11 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம்
பயனடைந்து வருகின்றனர்.
தற்போது
நாட்டின் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் விவசாயிகள் மேலும் பயனடையும் விதமாக
பல சலுகைகளையும் அரசு
அறிவித்து வருகிறது. அந்த
வகையில் விவசாயிகள் தங்களின்
ஓய்வு காலத்தில் பயனடையும்
விதமாக ரதான் மந்திரி
கிசான் மந்தன் யோஜனா
என்ற திட்டத்தை அறிவித்து
உள்ளது. இந்த திட்டத்தில் மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். பிரதான் மந்திரி கிசான்
சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்தவர்களும், இந்த
கிசான் மந்தன் திட்டத்தில் மூலம் பயனடையலாம்.
பிரதான்
மந்திரி கிசான் சம்மன்
நிதி திட்டத்தின் கீழ்
பதிவுசெய்யப்பட்ட 60 வயதுக்கு
மேற்பட்ட அனைத்து விவசாயிகளும் இந்த மந்தன் திட்டத்தில் பயனடைவார்கள். இரண்டு
ஹெக்டேர் நிலத்திற்கு குறைவாக
உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். 18 வயது நிரம்பிய
விவசாயிகள் இந்த திட்டத்தில் மாதம் ரூ.55ம்,
30 வயது விவசாயிகள் மாதம்
ரூ.1,000ம் ஒவ்வொரு
மாதமும் செலுத்த வேண்டும்.
இவர்கள் தங்கள் ஓய்வு
காலத்தில் மாதம் ரூ.3,000
பென்ஷன் தொகையாக பெற
முடியும் என்று துறை
அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


