வேலூரில் வரும்
27-இல் சிறப்புத் தொழில்
கடன் மேளா
தமிழ்நாடு
தொழில் முதலீட்டு கழகம்
சார்பில், வேலூரில் ஆக.
27-இல் நடைபெறும் குறு,
சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன்
மேளாவில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில்முனைவோர் பங்கேற்று
பயன்பெறலாம் என்று மாவட்ட
ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய
தொழிற்சாலைகள் நிறுவுதல்
விரிவுபடுத்துதல், உற்பத்தியை பன்முகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கான சிறப்புத் தொழில்
கடன் மேலாள தமிழ்நாடு
தொழில் முதலீட்டுக் கழகத்தின்
வேலூா் காந்தி நகரில்
காட்பாடி மெயின் ரோடில்
73 ஏ என்ற எண்ணில்
உள்ள வேலூா் கிளை
அலுவலகத்தில் ஆக.
27-இல் நடைபெறுகிறது. இதில்,
திட்டங்கள், கடன்கள், மானியங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.
தகுதி
பெறும் தொழில்களுக்கு தமிழக
அரசின் 25 சதவீத முதலீட்டு
மானியம் ரூ. 50 லட்சம்
வரை வழங்கப்படும். முகாமில்
சமா்ப்பிக்கப்படும் பொது
கடன் விண்ணப்பங்களின் ஆய்வுக்
கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை
அளிக்கப்படும். நீட்ஸ்
திட்டத்துக்கு ஆய்வு
கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோர்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 0416 – 2249821,
2248861 என்ற எண்ணுக்குத் தொடா்பு
கொள்ளலாம் என்று ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
வேலூரில்
ஆக. 31-இல் நடைபெறும்
சிறப்புத் தொழில் கடன்
மேளாவில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோர் தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில்
கடன், மத்திய, மாநில
அரசுகளின் மானியச் சேவைகளை
பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்
குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


