ஜனவரியில் இலவச
நீட் பயிற்சி – பள்ளி
கல்வித்துறை
அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளி மாணவர்களுக்கான, ‘நீட்‘ தேர்வு இலவச
பயிற்சியை, ஜனவரியில் துவங்க,
பள்ளி கல்வித் துறை
திட்டமிட்டுள்ளது.
பிளஸ்
2 படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,
மற்றும் பி.டி.எஸ்.,
உள்ளிட்ட மருத்துவ படிப்பில்
சேருவதற்கு, ‘நீட்‘ நுழைவு
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். இந்த தேர்வுக்கு பிளஸ் 2 மட்டுமின்றி, இந்திய
மருத்துவ கவுன்சில் சார்பில்
வெளியிடப்படும், நீட்
தேர்வுக்கான பாடங்களையும் படிக்க
வேண்டும்.இதற்காக, அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், தமிழக அரசின்
சார்பில் ‘நீட்‘ தேர்வு
இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
மருத்துவ
படிப்பில் அரசு பள்ளி
மாணவர்களுக்கு, 7.5 சதவீத
இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அந்த ஒதுக்கீட்டை அரசு
பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில், இந்த
பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும்
ஜனவரி முதல் நீட்
சிறப்பு பயிற்சி வகுப்பு
நடத்த பள்ளி கல்வித்
துறை முடிவு செய்துள்ளது. ‘சூப்பர் 30′ என்ற திட்டத்தில், அரசு பள்ளிகளின் ‘டாப்பர்‘
மாணவர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சேராத
மற்ற மாணவர்களுக்கு, ஜனவரியில்
இருந்து இரண்டு மாதங்கள்
நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

