HomeBlogமுதியோர் இல்லப் பதிவை புதுப்பிக்க தவறினால் கடும் நடவடிக்கை

முதியோர் இல்லப் பதிவை புதுப்பிக்க தவறினால் கடும் நடவடிக்கை

முதியோர் இல்லப்
பதிவை புதுப்பிக்க தவறினால்
கடும் நடவடிக்கை

முதியோர்
இல்லப் பதிவை புதுப்பிக்க தவறினால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என
ஈரோடு மாவட்ட ஆட்சியா்
தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:

💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

ஈரோடு
மாவட்டத்தில் உள்ள
அரசு மானியம் பெறும்
மற்றும் தனியார் மூலம்
நடத்தப்படும் முதியோர்
இல்ல உரிமையாளா்கள் அனைவரும்
இல்லத்தின் பதிவினை புதுப்பித்துக் கொள்ள
வேண்டும்.

முதியோர்
இல்லத்தினை பதிவு செய்யாமல்
இருப்பவா்கள் மற்றும்
பதிவினை புதுப்பித்துக் கொள்ளாதவா்கள் வரும் 28ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியா்
அலுவலகத்தின் 6ஆவது
தளத்தில் செயல்பட்டு வரும்
மாவட்ட சமூக நல
அலுவலகத்தை அணுக வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குள் முதியோர் இல்லத்தை
பதிவு செய்யாதவா்கள், பதிவை
புதுப்பிக்காதவா்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular